×

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ₹4.04 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருத்தணி, ஜன. 7: திருவாலங்காடு ஒன்றியத்தில் ₹4.04 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ₹4.04 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது, திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள நல்லாட்டூர், என்.என்.கண்டிகை மற்றும் பூனிமாங்காடு ஊராட்சிகளில் கொசஸ்தலை ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் ₹4.04 கோடியில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் முடிவுறும் தருவாயில் தற்கால ஆண்டு மக்கள் தொகையின்படி 9,182 மக்களுக்கு 0.413 மில்லியன் லிட்டர், இடைக்கால ஆண்டு மக்கள் தொகையின்படி 10,156 மக்களுக்கு 0.505 மில்லியன் லிட்டர் மற்றும் உச்சகால ஆண்டு மக்கள் தொகையின்படி 11,196 மக்களுக்கும் 0.551 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

இந்த குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 0.551 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்காக ₹4.04 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் நிதி ஆதாரம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நீரானது கொசஸ்தலை ஆற்றில் 4.50 மீ விட்டமுள்ள 3 நீர் உறிஞ்சி கிணறு மூலம் பெறப்பட்டு, மோட்டார் மூலம் 100 மி.மீ. விட்டம் கொண்ட வார்ப்பட இரும்பு குழாய்கள் மூலம் ஆற்றின் கரையில் உத்தேசிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் லிட்டர் தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்படும்.

இத்தொட்டியிலிருந்து பிரதான குழாய்கள் பூனிமாங்காடு ஊரட்சிகளுக்கு தனியாக ஒரு பிரதான குழாயும், நல்லாட்டூர் மற்றும் என்.என்.கண்டிகை ஊராட்சிகளுக்கு தனியாக ஒரு பிரதான குழாயும், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் உந்து செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கான பணி உத்தரவு கடந்த 16.12.2022 அன்று வழங்கப்பட்டு, இத்திட்டம் முழுமையாக கடந்த செப்டம்பரில் முடிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலைமைச்சரால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் அமல தீபன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சம்பத்குமார், வாட்டாட்சியர் மதன், ஊராட்சி தலைவர்கள் நிர்மலா கோவிந்தசாமி, நற்குனம், கலையரசி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்
சென்னை ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகத்தால் வருகின்ற 13ம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில், பல்வேறு பணிகளுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆர்வமுள்ள திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அணுகி அறிந்துகொள்ளலாம் அல்லது தொலைபேசி எண்:044 – 27660250 வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ₹4.04 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார் கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvalangadu Panchayat Union ,Tiruthani ,Chief Minister ,M. K. Stalin ,Tiruvalangadu Union ,Tiruvallur District ,
× RELATED மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது